Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

சடச்சி அம்மன் கோயில்

Sadachi Amman Temple

கோயிலின் வேறு பெயர்

சடச்சியாத்தாள் கோயில்


தலத்தின் சிறப்பு

தோல் சார்ந்த நோய், பாம்பு விஷக்கடி உள்ளிட்ட நோய்களுக்கு சடச்சியம்மன் கோயில் விபூதி மிகவும் அருமருந்தாக செயல்படுகிறது என்பது நம்பிக்கை. புதுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள இந்த சடச்சியம்மன் மிகவும் புகழ்வாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறார்.


மூலவர் பெயர்

சடச்சியம்மன்


ஊர்

புதுப்பட்டி

மாவட்டம்

மதுரை

தல மரம்
நாட்டு பூவரச மரம்
கோயில் குளம்/ஆறு
சடச்சியம்மன் கோயில் தீர்த்தம்
பூசைக்காலம்
காலை 5:00 மணி முதல் 8:00 மணி வரை பின்பு மாலை 4:00 மணி முதல் 9:00 மணி வரை வழிபாடு நடத்தப்படுகிறது.
திருவிழாக்கள் விவரங்கள்
இந்த சடச்சியம்மன் கோயிலில் தைப்பொங்கல் பண்டிகையை மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அம்மனுக்காக இரண்டு பொங்கல் -மிளகு இல்லாத வெண்பொங்கலும், சக்கரை பொங்கலும் - படைக்கப்படுகின்றன. இவை காலையில் செய்ய ஆரம்பிக்கப்பட்டு, மதியம் 2 மணி அளவில் தயாராகின்றன. பின்பு ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து சடச்சியம்மனை வழிபட்டு விட்டு 4 மணி அளவில் பிரசாதத்தைப் பெற்றுக் கொள்வர்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பாம்பு விஷக்கடி, சரும நோய் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், சடச்சியம்மன் கோயிலில் காணப்படும் அந்த நாட்டு பூவரச இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பாம்பு கடிபட்ட இடத்தில் வைத்து, சடச்சியம்மன் தீர்த்தத்தில் குளித்து வர அந்த விஷமானது முறியும் என ஊர் மக்கள் சார்பில் கூறப்படுகிறது. மேலும், சருமம் சார்ந்த பிரச்சினை மற்றும் பாம்பு கடி விஷ முறிவு அனைத்திற்கும் சடச்சியம்மன் விபூதியே மருந்தாக உள்ளது.
காலம்/ ஆட்சியர்
சுமார் 400 வருடங்கள் பழமையான கோயிலாக கருதப்படுகிறது.
தல வரலாறு / கதைகள்
பல காலம் முன்பு, குழந்தை திருமணம் செய்து வைக்கபட்ட சிறுமியின் கணவன் இறந்து போகவே அச்சிறுமியும் உடன்கட்டை ஏற நேரிட்டது. அவளது பெற்றோர், கன்னிப்பெண்ணாக உடன்கட்டை ஏறிய தங்கள் மகளின் நினைவாக, அவளின் சாம்பலைக் கொண்டு எழுப்பிய கோயில் இது என சொல்லப்படுகிறது. பின்னாளில் ஊரைக் காக்கும் சடச்சியம்மனாக அவள் மாறி கதை செவிவழி செய்தியாக சொல்லப்பட்டு வருகிறது.
கோயில் அமைப்பு
நாட்டுப் பூவரச மரத்தின் அடியில் திறந்த வெளியில் சடச்சியம்மன் மக்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சுருக்கம்
பல்வேறு சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கும், பாம்பு விஷக்கடி பிரச்சனைகளுக்கும் மதுரையில் மிகவும் பிரபலமான கோயிலாக இந்த சடச்சியம்மன் கோயில் சொல்லப்படுகிறது. சடச்சியம்மன் ஊரை தீங்கிலிருந்தும் காப்பாற்றும் காவல் தெய்வமாகவும் கருதப்படுகிறார்.
தகவல்

முனைவர் துர்கா தேவி

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், மந்தையம்மன் கோயில்
செல்லும் வழி
புதுப்பட்டி சாவடியை ஒட்டிய சாலையில் மந்தையம்மன் கோயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
புதுப்பட்டி பேருந்து நிலையம், ஒத்தக்கடை பேருந்து நிலையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை ரயில் நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
தங்கும் வசதி
ஒத்தக்கடை
புகைப்படங்கள்

ஜென்சி

ஜென்சி

ஜென்சி