Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

கோடாங்கிராயன் கோயில்

Kodāngirāyan Temple

பிற தெய்வத்தின் பெயர்கள்

நொண்டிக் கருப்புசாமி


அமைவிடம்

ஊரின் நுழைவு வாயிலில் இக்கோயில் அமைந்துள்ளது.


மூலவர் பெயர்

கோடாங்கிராயன்


ஊர்

இ.மலம்பட்டி

மாவட்டம்

மதுரை

பூசைக்காலம்
எந்நேரமும் திறந்தே இருக்கும் கோயில்.
திருவிழாக்கள் விவரங்கள்
சித்திரை மாதம் திருவிழா நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
நேர்த்திக்கடனாக ஆடுக் கிடாய் மற்றும் கோழி பலியிடப்படுகிறது.
காலம்/ ஆட்சியர்
சுமார் 100 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
கோயில் அமைப்பு
ஒரு பீடத்தின் மேல் பல உலோகத்தினால் ஆன அரிவாள்கள் நட்டு வைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் விவரங்கள்
இவ்வழிபாட்டு தலத்தில் ஒரு பீடத்தின் மேல், வெவ்வேறு வடிவங்கள் கொண்ட பல கற்களும், அரிவாள்களும், பலிபீடமும், நாகர் சிற்பமும், எலி சிற்பமும் மற்றும் திரிசூலங்களும் வைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன. இங்கே எவ்வித தெய்வ உருவ சிற்பங்களும் இல்லை. மாறாக பெரிய பெரிய கற்களே வழிபடப்படுகின்றன. குறிப்பாக இப்பீடத்தின் ஒரு புறம், இரண்டு செங்கற்களின் மேல் ஒரு கருங்கல் வைக்கப்பட்டு, அதை நோக்கியவாறு மூஞ்சூறு எனப்படும் எலியின் சிறப்பம் வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் அக்கருங்கல்லை விநாயகராக பாவித்து வணங்கி வருகின்றனர் என்று கருத வாய்ப்புள்ளது.

பெரும்பாலான கோயில்களில் காணப்படும் தெய்வ உருவ சிலைகள் ஏதுமின்றி, ஒரே ஒரு மேடை போன்ற அமைப்பின் மேல் அரிவாள்கள், சூலங்கள் மற்றும் கற்களை மட்டுமே வைத்து வழிபாடு செய்யும் இம்மக்களின் வழக்கம் குறிப்பிடத்தக்க சிறப்பாகும். தமிழ்நாட்டின் நாட்டுப்புற வழக்கங்களில் இது மாதிரியான வழிபாடுகள் பல இடங்களில் காணப்படுகின்றன.
தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
நெவுலிநாதர் கோயில்
செல்லும் வழி
மேலூரிலிருந்து திருப்பத்தூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து இ.மலம்பட்டி ஊருக்கும் செல்லும் வழியில் செல்லலாம்.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இ.மலம்பட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
மேலூர்
புகைப்படங்கள்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்