காலை 5 மணி மற்றும் மாலை 7 மணிக்கு கோயில் திறகப்படும்.
திருவிழாக்கள் விவரங்கள்
புரட்டாசி மாதம், 18 நாட்கள் உற்சவம் நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
இங்கு நேர்த்திக்கடனாக குழந்தை பொம்மை வாங்கி வைக்கும் வழிபாட்டு முறை கடைபிடிக்கப்படுகிறது. திருவிழாவின் பொழுது அம்மன் சிலை ஊர் சாவடியில் வைக்கப்பட்டு நாடகம் நடத்தப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
தல வரலாறு / கதைகள்
இவ்வூர் உருவான காலத்தில், ஊர் வாசி ஒருவர் விவசாயம் செய்து கொண்டிருந்தாராம். அவர் மண்வெட்டியால் நிலத்தை தோண்டியபோது ஒரு சிலை தென்பட்டதாம். அந்த சிலையே தற்போது முத்துநாயகி அம்மனாக கருதப்பட்டு வழிபடப்படுகிறது என ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கோயில் அமைப்பு
கோபுரம், மகா மண்டபம், முன் மண்டபம் மற்றும் கருவறை அமைப்பு உள்ளது. இதைத் தவிர கோயில் குளம் மற்றும் சந்நதிகள் அமைந்துள்ளன.
கூடுதல் விவரங்கள்
இது சுயம்பு கோயிலாக தோன்றியதாக ஊர் மக்கள் நம்புகின்றனர். இவ்வூரில் அமைந்துள்ள முக்கிய கோயில் இதுவாகும். இதனை மையமாகக் கொண்டுதான் ஊரிலுள்ள மற்ற கோயில்கள் உருவாகியுள்ளன என்றும் கூறப்படுகிறது.
கோயில் நுழைவாயிலின் வலப்பக்கம், ஒரு பீடத்தின் மேல் பல மனித பொம்மைகள் மற்றும் இறை உருவ சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வேண்டுதல் பெயரில் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்டவையாகும். கோயில் வளாகத்தில் நாகர் மற்றும் விநாயகர் சிற்பங்களும் காணப்படுகின்றன. மேலும் கோயிலில் உள்ள ஒரு மரத்தில் குழந்தை பாக்கியம் வேண்டி தொட்டில்கள் மற்றும் துணிகள் கட்டப்பட்டுள்ளன.கோயில் வளாகத்தில் வாள் மற்றும் நீளமான துப்பாக்கி ஏந்திய ஒருவரின் புடைப்புச் சிற்பமும் வைக்கப்பட்டுள்ளது. இது நடுகல் சிறப்பாக இருக்கலாம்.
Worship Timings
The temple opens at 5 a.m. and 7 p.m.
Festivals details
In the month of Purattasi, the festival is celebrated for 18 days.
Rituals of worship / Methods
Here, the worship practice of offering a child doll as a vow is observed. During the festival, the Amman idol is placed in the village hall and a play is performed.
Inscription / Copper
No
Architecture
The temple has a gopuram, maha mandapam, front mandapam, and sanctum sanctorum. In addition, the temple has a tank and shrines.
Additional Information
The villagers believe that this temple appeared on its own (swayambhu). This is the main temple in the village. It is said that other temples in the village were established around this temple.
On the right side of the temple entrance, several human figurines and divine statues are placed on a pedestal. All of these have been offered as fulfillment of vows. In the temple courtyard, there are also serpent (Nagar) and Vinayaka statues. Furthermore, on a tree in the temple, cradles and cloths are tied as offerings for child blessings. In the temple courtyard, there is also a sculpture of a person holding a sword and a long gun. This could be a notable mid-stone (nadukal) feature.