Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

மாணிக்கவாசகர் திருக்கோயில்

Mānikkavāsagar Temple

அமைவிடம்

திருவாதவூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது.


மூலவர் பெயர்

மாணிக்கவாசகர்


தல மரம்

மகிழம்


ஊர்

திருவாதவூர்

மாவட்டம்

மதுரை

கோயில் குளம்/ஆறு
உயிருண்ணிப்பத்து கிணறு
பூசைக்காலம்
காலை 6 மணிக்கு திறக்கப்படும்.
திருவிழாக்கள் விவரங்கள்
மாணிக்கவாசகர் பிறந்த நாளான ஆனி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்திரத்தன்று வருடம் தோறும் குரு பூஜை நடைபெறுகிறது.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 20ஆம் நூற்றாண்டு
தல வரலாறு / கதைகள்
சைவக் குரவர்களுள் ஒருவரான மாணிக்க வாசகர் பிறந்த தலம் திருவாதவூர் ஆகும். எனவே அவர் பிறந்து வளர்ந்த வீட்டை தற்போது கோயிலாக கட்டி வழிபட்டு வருகின்றனர்.
கோயில் அமைப்பு
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் மற்றும் சுற்று பிரகாரம் உள்ளது. உயர்ந்த மதில் சுவரால் கோயில் பாதுகாக்கப்பட்டுள்ளது. தலை வாசல் கிழக்கு பார்த்தும் மறு வாசல் மேற்கிலும் அமைந்துள்ளது.
கூடுதல் விவரங்கள்
திருவாதவூர், சைவக் குரவர்களுள் ஒருவரான மாணிக்க வாசகர் பிறந்த தலம் என்பதால் அவருக்கு இங்கு கோயில் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. மாணிக்கவாசகரின் இயற்பெயர் திருவாதவூரர் ஆகும். இவருடைய தந்தை திருவாதவூரில் உள்ள மிகப்பழமையான சிவன் கோயிலான திருமறைநாதர் சுவாமி கோயிலின் அர்ச்சகராக பணிபுரிந்தார். இந்தக் கோயிலில் உள்ள மண்டபத்தில், சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு சிலம்பொலி கேட்டருளியதாகக் கூறப்படுவதால், இந்த நூறுகால் மண்டபம் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.

மாணிக்கவாசகர் சிறுவயதிலருந்தே மிகுந்த சிவபக்தி கொண்டவராக விளங்கினார். திருவாதவூரரது அறிவுத்திறனைக் கண்டு வியந்த பாண்டிய மன்னன், அரிமர்த்தன பாண்டியன், அவரை தனது அமைச்சராக பணியமர்த்தினார். இவருக்குத் தென்னவன் பிரமராயன் என்னும் பட்டப் பெயரும் அளித்தான். வாதவூரர், திருப்பெருந்துறை முதலிய இடங்களுக்குச் சென்று திருவாசகப் பாக்களையும் திருக்கோவையாரையும் இயற்றி பக்தி செலுத்தினார். சிதம்பரத்தில் ஈழ நாட்டரசன் மகளான ஊமைப் பெண்ணைப் பேசச் செய்தார் என்றும் பௌத்தரை வாதிட்டு வென்றார் என்றும் இவர் வரலாறு கூறுகிறது. இவரது திருவாக்குகள் மாணிக்கம் போல இருந்ததால் 'மாணிக்கவாசகர்' என்னும் பெயர் இவருக்கு வழங்கப்பட்டது. இவர், தமது முப்பத்திரண்டாவது வயதில் சிவகதியடைந்தார்.

அருள்மிகு மாணிக்கவாசகர், இத்திருக்கோயிலில் நின்ற கோலத்தில் கருவறையில் காட்சியளிக்கிறார். உயிருண்ணிப்பத்து கிணறு என்று அழைக்கப்படும் தீர்த்தம் கோயிலின் வடகிழக்கில் அமைந்துள்ளது. திருவாசகம் முற்றோதுதல் பயிற்சி மற்றும் திருவாசக உரை தொடர்பான சொற்பொழிவுகள் இக்கோயிலில் நடைபெறுகிறது.
தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
திருமறைநாதர் திருக்கோயில்
செல்லும் வழி
மதுரையிலிருந்து திருமோகூர் வழியாகச் திருவாதவூர் செல்லும் அனைத்துப் பேருந்துகளிலும் பயணிக்கலாம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவாதவூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
மேலூர்
புகைப்படங்கள்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

காணொலி

முனைவர்.மீ.மருது பாண்டியன்