Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

பொக்கிஷ விஷ்வநாதர் கோயில்

Pokkisha Vishwanāthar Temple

கோயிலின் வேறு பெயர்

ஒட்டைக் கோயில், சிவன் கோயில், பொக்கிஷநாதர் கோயில்


அமைவிடம்

விக்கிரமங்கலம் வழியாக செல்லலாம்.


தலத்தின் சிறப்பு

இக்கோயிலில் சோழபாண்டியர் கட்டிடக்கலை அம்சங்கள் காணப்படுகிறது.


ஊர்

எ.தெப்பத்துப்பட்டி

மாவட்டம்

மதுரை

மூலவர் பெயர்
பொக்கிஷநாதர்
கோயில் குளம்/ஆறு
கோயில் கிணறு
பூசைக்காலம்
தினமும் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை நடை திறக்கப்படும்.
திருவிழாக்கள் விவரங்கள்
பிரதோஷம், சிவராத்திரி அமாவாசை, பௌர்ணமி, சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி மற்றும் சிவனுக்கு உகந்த முக்கிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். தேய்பிறை அஷ்டமியன்று காலபைரவர் பூசை நடைபெறும்.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 9-10 ஆம் நூற்றாண்டு, சோழபாண்டியர்.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மன் ஆகிய சிற்பங்களும், அர்த்த மண்டபக் கோட்டத்தில் கணபதி மற்றும் பைரவர் சிற்பங்களும் காணப்படுகின்றன. இங்கு பைரவர் சிற்பம் கோட்டத்தில் காணப்படுவது அரிதாகும். இவற்றைத் தவிர சப்தமாதர் சிற்பங்களும், சண்டேசர், நந்தி, ஆடல் மகளிரின் புடைப்புச் சிற்பங்கள், விநாயகர், விஷ்ணு, துர்க்கை ஆகிய சிற்பங்களும் காணப்படுகின்றன.
தல வரலாறு / கதைகள்
சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோயிலைப் பற்றி ஒரு செவிவழிக் கதை சொல்லப்படுகிறது. மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் பாண்டிய மன்னர் ஒருவர் சீரமைப்புப் பணிகளை (திருப்பணிகளை) மேற்கொண்டிருந்த காலகட்டத்தில், அப்பணிகளுக்குத் தேவையான கட்டுமானக் கற்கள் உசிலம்பட்டியிலிருந்து தெப்பத்துப்பட்டி வழியாகக் கொண்டுவரப்பட்டன. கற்களைச் சுமந்துவரும் பணியாளர்கள் மற்றும் கால்நடைகள் இளைப்பாறுவதற்காக, மன்னர் இடைப்பட்ட இவ்வூரில் ஒரு சத்திரத்தை நிறுவினார். அத்துடன், இந்தப் பொறுப்புகளை நிர்வகிக்கும் கடமையை அவர் தன் மகனிடம் ஒப்படைத்தார் என சொல்லப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணிகள் நடந்துகொண்டிருந்த நிலையில், தெப்பத்துப்பட்டியில் தங்கியிருந்த அந்த இளவரசருக்கு, தன் தந்தையைப் போலவே தானும் அங்கு ஒரு புதிய சிவன் கோயிலைக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இந்த எண்ணம், சிவனாரின் திருவருளாலேயே தனக்கு உண்டானதாகக் கருதி, அவர் இக்கோயிலைக் கட்டியதாக செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இக்கோயிலில் கல்வெட்டுகள் ஏதும் கண்டறியப்படாததாலும், இக்கோயில் பல ஆண்டுகளாக வழிபாடின்றி இருந்ததாலும் இதன் தல வரலாற்றை அறிய முடியல்லை. எனினும் இக்கோயில் மலையருகில் மறைந்து காணப்படுவதாலும் இக்கோயில் இறைவனின் பெயர் ’பொக்கிஷநாதர்’ என்று உள்ளதாலும் இது பாண்டியர் கால கருவூலமாக இருந்திருக்கலாம் என அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர். இதற்கான ஆதாரங்கள் எதுவும் தற்போது இல்லை. மேலும், இக்கோயிலில் பொக்கிஷங்கள் இருப்பதாகவும், அதை ’முனி’ ஒன்று காவல் காத்து வருவதாகவும் இவ்வூர் மக்களால் நம்பப்படுகிறது. இக்கோயிலில் பொக்கிஷம் உள்ளது என்ற செய்தி பரவியதால் இங்கே பல கொள்ளைகள் நடைபெற்றுள்ளன. இந்த கோயிலில் இருந்த பல சிலைகளும் திருடப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து ஊர் மக்கள் ஒன்றுகூடி கோயிலை புணரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கோயில் தற்போது நல்ல நிலையில் இயங்கி வருகிறது.
கோயில் அமைப்பு
கருவறை, முகமண்டபம், மகாமண்டபம் மற்றும் திருச்சுற்று போன்ற அமைப்புகளைக் கொண்ட இந்த சிவன்கோயில் சோழ பாண்டியர் கட்டடக் கலையை பிரதிபலிக்கிறது. பெரும்பாலான பாண்டியர் கோயில்களில் தேவகோட்டங்கள் சிற்பங்களின்றி காணப்படும். ஆனால் இங்கு கோட்டச் சிற்பங்கள் அமைந்துள்ளன. மேலும் கருவறையில் அமைந்துள்ள சிவலிங்கம் சதுர வடிவ ஆவுடையாரைப் பெற்றுள்ளது. இது பாண்டியரின் கலைப்பாணியாகும். இங்குள்ள இலிங்கத்தின் பாணப்பகுதியும் சதுர வடிவமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கோயிலின் தளப்பகுதி சிதைந்துள்ளது மற்றும் விமானத்தின் மேற்பகுதி காணப்படவில்லை. இக்கருவறை விமானம் பாதபந்த அதிட்டானத்தை பெற்றுள்ளது. கருவறையின் அபிஷேக நீர் வெளியேறும் பிரனாலா எனப்படும் நாழி, யானையாளி முகத்துடன் உள்ளது. தேவகோட்டங்களின் மேல் உள்ள மகர தோரணங்கள் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் விவரங்கள்
இக்கோயிலில் கல்வெட்டுகள் எதுவும் இடம் பெறவில்லை. இக்கோயில் கட்டப்பட்ட காலம் சோழரும் பாண்டியரும் போரிட்டுக் கொண்டிருந்த காலமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. நிலையான அரசு அமையாததால் கல்வெட்டு இடம் பெறவில்லை எனலாம். மதிரை கொண்ட கோப்பரகேசரி என்ற பட்டத்தை முதலில் பராந்தக சோழனும், பின்னர் இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழனும் பெற்றுள்ளனர். எனவே இவர்களின் காலத்திலோ அல்லது சமகாலத்திலோ இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருத வாய்ப்புண்டு. சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இக்கோயிலை இவ்வூர் மக்கள் ‘ஒட்டைக் கோயில்’ என்று அழைக்கின்றனர். ஏனெனில் பொக்கிஷநாதர் சிவலிங்கமானது திருகக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
தகவல்

க.த. காந்திராஜன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
கம்ப காமாச்சி கருப்பசாமி கோயில், எம்.கீழப்பட்டி; கடை அய்யனார் கோயில், உத்தங்குடி.
செல்லும் வழி
விக்கிரமங்கலத்தில் இருந்து உத்தமநாயக்கனூர் செல்லும் வழியில், 20-வது கி.மீ-ல் தெப்பத்துப்பட்டி கிராமம் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
எரவார் பட்டி, உசிலம்பட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
புகைப்படங்கள்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்