ஊரின் வரலாற்றுப் பெயர்
சேந்தனேரி கட்டிகல்லூர்
பெயர்க் காரணம்
சங்ககாலத்தில் இவ்வூர் கள்ளூர் என்று அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு சங்க கால இலக்கியமான அகநானூற்றின் 256ஆவது பாடல் சான்றாகச் சொல்லப்படுகிறது. கட்டி என்ற சிற்றரசர்கள் இப்பகுதியை ஆண்டு வந்ததால் இவ்வூர் கட்டிக் கள்ளூர் என்று அழைக்கப்பட்டு, பின்னர் முற்கால பாண்டியன் செழியன் சேந்தன் என்பவன் இவ்வூரில் சேந்தன் ஏரி என்ற நீர் நிலையை அமைத்ததால் இவ்விடத்திற்கு சேந்தனேரி கட்டிக் கள்ளூர் என பெயர் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
பொது ஆண்டு 11ஆம் நூற்றாண்டில், இப்பகுதியை ஆட்சி புரிந்த பராக்கிரம பாண்டியன், இப்பகுதியை பராக்கிரம பாண்டியபுரம் என்றும், பொது ஆண்டு 12ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த முதலாம் குலசேகர பாண்டியன் இப்பகுதியை குலசேகரபுரம் என்றும் பெயரிட்டனர். இருப்பினும் கட்டிக் கள்ளூர் என்ற பழம் பெயர் மக்களின் வழக்கில் நிலைத்திருந்தது. பின்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இவ்வூருக்கு 'தென்கரை' என்ற பெயர் ஏற்பட்டதாக அக்கால கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. வைகை நதி, மதுரை மாவட்டம் வழியாக, தெற்கு திசையில் பாய்வதால், வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இந்த ஊர் ’தென்கரை’ என்று அழைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
வீடுகளின் எண்ணிக்கை
2565
ஊர்
தென்கரை
மாவட்டம்
மதுரை