Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

செங்கப்படை ஊர் வரலாறு

History of Sengapadai

ஊரின் வரலாற்றுப் பெயர்

செங்கோல் படை


பெயர்க் காரணம்

செங்கப்படை என்ற இவ்வூர் பாண்டிய மன்னன் கூன் பாண்டியனால் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது. வைகை ஆற்றின் பங்கான குண்டாற்றின் கரையில் உள்ள இந்தக் கிராமம் இராணுவத் தளமாக உருவாகியது. முந்தைய காலத்தில், இந்தக் கிராமம் 'செங்கோல் படை' (சிம்மாசனத்தின் இராணுவம்) என்று அறியப்பட்டது. அதுவே பின்னர் 'செங்கப்படை' என்றானதாக சொல்லப்படுகிறது.

பாண்டியர் மற்றும் நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில், மதுரை நகரிலும் மதுரை நகரின் புறநகர் பகுதிகளிலும் பல இராணுவ தளங்கள்/ படை வீடுகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அவற்றுள், தென் மாவட்டங்களில் இருந்து வருபவர்களை கண்காணிக்கும் விதமாக இந்த செங்கோல் படை என்னும் இராணுவத் தளம் அமைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.


ஊரில் உள்ள சமூகங்களின் எண்ணிக்கை

1157 குடும்பங்கள்


ஊர்

செங்கப்படை

மாவட்டம்

மதுரை

ஊர் வரலாறு

செங்கோல்படை என்று அழைக்கப்பட்ட செங்கப்படையில் இரும்புக் காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பகுதியில் கல்மணிகளும் கிடைத்துள்ளன. இந்தக் கிராமத்தில் அமைந்துள்ள இரண்டு பழைமையான கோயில்கள் இவ்வூரின் தொன்மை மற்றும் வரலாற்றைப் பறைசாற்றுகின்றன. ஊரின் மேற்கில் சென்னகேசவப் பெருமாள் கோயிலும், கிழக்கில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட சித்தி விநாயகர் கோயிலும் உள்ளன. ஊரின் நடுவில் உள்ள விநாயகர் கோயில், மாலிக்காபூர் படையெடுப்பால் சிதைக்கப்பட்டதாக சொலப்படுகிறது. இக்கோயிலில் உள்ள விநாயகர் சிலையின் தலை உடைந்ததால், இது மொட்டைப் பிள்ளையார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. அணையாவிளக்கு அமைந்துள்ள சென்னகேசவப் பெருமாள் கோயில், திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்டதாகச் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.

தகவல்

முனைவர் ஆத்மநாதன்

குறிப்புகள்

tnsda mdi guide 2005, catalogue of Archaeological sites vol 1 பக்கம் 306.

காணொலி

முனைவர் பா.ஆத்மநாதன்